திருப்பூர்: கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடும் - பதுக்கல் குடோன்களுக்கு சீல்! - Seithipunal
Seithipunal


ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் போரினால், இந்தியா முழுவதும் எரிவாயு விநியோகம் முடங்கியுள்ளது. இதன் தாக்கம் திருப்பூரில் மிகக் கடுமையாக எதிரொலிக்கிறது.

உணவகங்கள் பாதிப்பு:
வர்த்தக ரீதியிலான கியாஸ் சிலிண்டர்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாட்டால், திருப்பூரில் உள்ள பல ஓட்டல்கள் உணவு தயாரிப்பைக் குறைத்துள்ளன; சில உணவகங்கள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன. வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளதால், தனியார் நிறுவனங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பதுக்கல்காரர்களுக்குக் கடும் எச்சரிக்கை:
இந்தச் சூழலைப் பயன்படுத்தி சிலிண்டர்களைப் பதுக்கி, அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் (Goondas Act) கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை:
ஆட்சியர் மனிஷ் நாரணவரே உத்தரவின் பேரில், மாவட்ட வழங்கல் அதிகாரி சரவணன் தலைமையிலான குழுவினர் திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்:

குடோனுக்குச் சீல்: வீரபாண்டி பாரியூர் அம்மன் நகரில் உள்ள தனியார் கியாஸ் நிறுவனத்தில் பதுக்கல் நடப்பதாக நல்லூர் நுகர்வோர் நல மன்றம் அளித்த புகாரைத் தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

உரிமையாளர் மழுப்பல்: நிறுவனம் பூட்டப்பட்டிருந்த நிலையில், உரிமையாளர் போனில் முறையான விளக்கம் அளிக்காததால் அந்தப் பில்டிங்கிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சம்பந்தப்பட்ட உரிமையாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gas Shortage in Tiruppur Amid Iran Conflict Officials Seal Warehouse over Hoarding Suspicions


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->