பெண்களை குறிவைத்து திருடிய கும்பல் கைது ..27 சவரன் நகைகள் மீட்பு! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரியில் பெண்கள் மற்றும் வயதானவர்களை குறிவைத்து திருடி வந்த 2 பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 27 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பதவியேற்றது முதல் மாவட்டம் குற்ற சம்பவங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க துளிர் திட்டம்  ஒற்றை துவக்கி வைத்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.அதுமட்டுமல்லாமல் போதை பொருள் நடமாட்டம்,கொள்ளை போன்ற சம்பவங்களை தடுக்க நடவ்டிக்கைகளை தீவிர படுத்தி வருகிறார்.

இந்தநிலையில் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் உதவி காவல் கண்காணிப்பாளர் லலித் குமார் தலைமையிலான போலீசார்  பல வருடமாக திருட்டுத் தொழிலில் ஈடுபட்டிருந்த விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேலகாந்தி நகர் பகுதியைச் சேர்ந்த விஜயா, மஞ்சு, அரவிந்த் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் உட்பட பல்வேறு இடங்களில் தொடர்ந்து இவர்கள் பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் வயதான பெண்களை குறி வைத்து பர்ஸ், செயின் ஆகியவைகளை திருடி வந்தது தெரிய வந்துள்ளது. அவர்களிடமிருந்து 27 சவரன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்தை பறிமுதல் செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் போக்சோ குறித்து விழிப்புணர்வு செய்ய தனி காவலர்களை நியமித்தது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளுக்கு ஏற்கனவே மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gang targeting women arrested Recovery of 27 sovereigns of jewelry


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->