சென்னையில் ரூ.500 கள்ளநோட்டு புழக்கமா..? திருவொற்றியூர், எண்ணூரில் பழ வியாபாரிகளை ஏமாற்றிய கும்பல்..1
Gang Cheats Fruit Vendors in Chennais Thiruvottiyur and Ennore Using Fake rs500 Notes
சென்னை திருவொற்றியூர், எண்ணூர் மார்க்கெட் பகுதிகளில் சாலையோரம் கடை நடத்திவரும் பெண்கள் மற்றும் மூதாட்டிகளை குறிவைத்து ஒரு கும்பல் பொருட்கள் வாங்குவது போல் 500 ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விடுத்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, எண்ணூர் தாழங்குப்பம் பஜார் பகுதியில் சாலையோரம் பழ வியாபாரம் செய்து வரும் குமாரி என்பவரிடம் நேற்று காலை 500 ரூபாய் கள்ள நோட்டு கொடுத்து பழங்களை வாங்கிக் கொண்டு மீதி சில்லறையும் பெற்றுச் சென்றுள்ளனர். இதன்பிறகு குமாரி அந்த நோட்டை சக வியாபாரியிடம் கொடுத்த போது அது கள்ள நோட்டு என்று தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து எண்ணூர் போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், குமாரியிடம் விசாரணை நடத்தியதோடு, பின்னர் அந்த கள்ள நோட்டை வாங்கி பரிசோதனை செய்துள்ளனர். அந்த நோட்டை யார் கொடுத்திருப்பார்கள் என்பது குறித்து போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவொற்றியூர் மார்க்கெட்டில் ஜெயலட்சுமி என்ற மூதாட்டியிடம் போலி 500 ரூபாய் நோட்டு கொடுத்து பழங்கள் வாங்கி சென்றுள்ளதாக தெரிய வருகிறது.
English Summary
Gang Cheats Fruit Vendors in Chennais Thiruvottiyur and Ennore Using Fake rs500 Notes