இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்.!
From today rameshwaram fisherman indefinite strike
இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்.
கடந்த வாரம் நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருந்து இரண்டு படகுகளில் கடலுக்குச் சென்ற 21 மீனவர்கள் கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இதனிடையே இந்தியா வந்துள்ள இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி எல் பீரீஸ் டெல்லியில் நேற்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து 3 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 16 மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தொடர்ந்து இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்து வருவது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனையடுத்து இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.
English Summary
From today rameshwaram fisherman indefinite strike