#சென்னை || மதுபோதையில் தகராறு, நண்பனை கொலை செய்த இளைஞர் கைது..! - Seithipunal
Seithipunal


மது போதையில் பெயிண்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, பல்லாவரம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் சின்னதுரை.  இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். வேலைமுடித்து வரும் சின்னதுரை இரவில் பம்மல் பிரதான சாலையில் உள்ள நடைபாதையில் படுத்து தூங்குவது வழக்கமாக கொண்டுள்ளார். அப்போது, அவருக்கும்  ராஜா என்பவர் நண்பராக பழகி வந்துள்ளார்.

இருவரும் மது அருந்தியுள்ளனர்.அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த ராஜா சின்னதுரையை கொலை செய்ய முயன்றனர். அதன்படி,  சின்னதுரை தூங்கிய பின்ராஜா அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து சின்னதுரையின் தலையில் போட்டார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

காலையில் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் ராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Friend Killed his friend at chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->