மோசடி! ரூ.63 கோடி புதுச்சேரி அரசுக்கு இழப்பு...! ஒரு லட்சம் ரேஷன் கார்டுகளால் நடந்த தவறு...! - Seithipunal
Seithipunal


ரேசன் கார்டுகளை புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் கணக்கிட்டு வழங்கப்படும் இலவச அரிசியில் பல கோடி மோசடி நடந்துள்ளது என்றும் இதுகுறித்து  விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் என புதுச்சேரியை சேர்ந்த வக்கீல் பாலமுருகன் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களுடன் தலைமை செயலரிடம் புகாரளித்துள்ளார்.

பாலமுருகன்:

இதுதொடர்பாக வக்கீல் பாலமுருகன் தெரிவித்ததாவது,"புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 3,62,136 ரேசன் கார்டுகள் உள்ளன. இதில் மஞ்சள் ரேசன் கார்டுகள் 1,59,404. சிவப்பு ரேசன் கார்டுகள் 2,06,007. ஆண்டு வருமானம் 72000 ற்குள் இருப்பவர்களுக்கு தான் அவர்கள் வறுமையில் உள்ளதாக கருதி சிவப்பு ரேசன் கார்டு வழங்கப்படுகிறது.

அப்படி இருக்கும்போது மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 1,04,000 மாணவர்கள் படிக்கின்றனர். அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் சிவப்பு ரேசன் கார்டு பெற தகுதியுள்ளவர்களாக இருப்பர்.

தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் குடும்பத்தினர் கண்டிப்பாக சிவப்பு ரேசன் கார்டு பெற தகுதியுடையவர்களாக இருக்க மாட்டார்கள்.எனவே தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின் அடிப்படையில் 1,04,000 ரேசன் கார்டு மோசடியாக பெறப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆண்டிற்கு ரூ.63,30,24,000 அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.இந்த மோசடி சம்பந்தமாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fraud Loss of Rs 63 crore Puducherry government mistake made with one lakh ration cards


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->