வங்கிகளின் பெயரில் மோசடி..மக்களே உஷார்..சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!
Fraud in the names of banks People be careful Cyber crime police warn
ஏமாற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மீதும் அந்த ஏஜெண்டுகள் மீதும் சட்ட படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து புதுவை சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் கூறியதாவது:-சமீப காலத்தில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பொது மக்களை தங்கள் ஏஜெண்டுகள் மூலமாக கம்மியான வட்டிக்கு லோன் தருவதாக கூறி இன்சூரன்ஸ் போடுவதற்கு முன் பணம் கட்ட வைத்து பின்பு இன்சூரன்ஸ் போட்டபிறகு, கூறிய லோன் தொகையை தராமல் ஏமாற்றி விட்டு தலைமறைவாகின்றனர். இது போன்று ஏமாற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மீதும் அந்த ஏஜெண்டுகள் மீதும் சட்ட படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பாக எச்சரிக்கப்படுகின்றனர்.
மேலும் வாட்ஸ் ஆப் குழுக்களில் தற்போது பல்வேறு வங்கிகளின் பெயர்களில் தங்களின் வங்கிக்கணக்கு சஸ்பெண்ட் செய்ய உள்ளதாக குறுஞ்செய்தி மற்றும் அதனுடன் ஆப் லிங்க் வந்து கொண்டு உள்ளது. மேலும் அந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டாம். அப்படி நீங்கள் கிளிக் செய்தால் உங்களுடைய மொபைல் ஹாக் செய்து உங்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடி விடுவர். மேலும் உங்களின் வாட்ஸ் ஆப் ஹாக் செய்யப்படும்.அது இணைய வழி குற்றவாளிகள் தங்களிடம் பணத்தை பறிப்பதற்காக உருவாக்கிய போலியான லிங்க் மற்றும் செய்தியாகும். அதை யாரும் நம்ப வேண்டாம்.
பண பரிவர்த்தனை வங்கிக் கணக்கு போன்றவற்றில் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு நேரில் சென்று சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்.மேலும் இணைய வழி சம்பந்தமான புகார் தெரிவிக்க மற்றும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள 1930, 0413 2276144, 9489205246 எண்களில் இணைய வழி குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளவும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
English Summary
Fraud in the names of banks People be careful Cyber crime police warn