சென்னையில் அதிரடி ரெய்டு... "நயினார் நாகேந்திரன்" ஹோட்டலை சுத்து போட்ட அதிகாரிகள்.!! - Seithipunal
Seithipunal


தாம்பரம் ரயில் நிலையத்தில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் பணிபுரியும் பாஜக நிர்வாகியிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் தேர்தல் பிறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

தாம்பரம் ரயில் நிலையத்தில் சிக்கிய மூன்று பேரில் ஒருவரான பெருமாள் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உறவினர் என தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஹோட்டலில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

கீழ்பாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஹோட்டலில் உள்ள அனைத்து அறைகளிலும் தேர்தல் பரக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தாம்பரம் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட 4 கோடி ரூபாய் பணம் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய எடுத்துச் சென்றதாக தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Flying squad raids in Nainar nagenthiran hotel in Chennai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->