அதிகாலையில் சோகம் - திருக்கோவிலூர் அருகே கார் கவிழ்ந்து 5 பேர் பலி.!! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்​கோ​விலூர் அருகே காரின் டயர் வெடித்து பள்​ளத்​தில் கவிழ்ந்​த​தில் 5 பேர் உயி​ரிழந்​த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்​புரம் மாவட்​டத்தில் உள்ள அரகண்​டநல்​லூர் அடுத்த தேவனூர் கூட்​ரோடு பகு​தி​யைச் சேர்ந்​தவர் மாதவன். ஆயுதப்​படைக் காவலரான இவருடைய மனைவி மேனகா, அதே பகு​தி​யைச் சேர்ந்த தனலட்​சுமி, ராகவேந்​திரன், சங்​கீதா, ஒரு வயது குழந்தை கவுசி​கா, சுபா, சாந்தி, பூமாரி கிராமத்​தைச் சேர்ந்த சரிதா, அவரது சகோ​தரர் மோகன் உள்ளிட்டோர் நேற்று காரில் திரு​வண்​ணா​மலை கோயிலுக்கு சென்று கொண்​டிருந்​தனர்.

அதன் படி கார் கள்​ளக்​குறிச்சி மாவட்​டம் திருக்​கோ​விலூர் அடுத்த அத்​திப்​பாக்​கம் அருகே சென்று கொண்டிருந்த ​போது, திடீரென காரின் முன்​பக்க டயர் வெடித்​தது. இதனால், ஓட்டுநரின் கட்​டுப்​பாட்டை இழந்த கார் சாலை​யோர பள்​ளத்​தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்​தில் ஐந்து பேர் சம்பவ இடத்​திலேயே பரிதாபமாக 
உயி​ரிழந்​தனர்.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து காவல்துறைக்கு அளித்த தகவலின் படி போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்​களை மீட்​டு, சிகிச்சைக்காக திரு​வண்​ணா​மலை அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். இதற்கிடையே இந்த விபத்து குறித்து மணலூர்​பேட்டை போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

five peoples died for car accident in thirukovilur


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->