வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து.! திட்டமிட்ட சதியா? - விசாரணையில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


சென்னையை அடுத்த அமைந்தகரையிலிருந்து பூந்தமல்லி செல்லும் நெடுஞ்சாலையில் வணிக வளாகம் ஒன்றில் நேற்று இரவு 9.30 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தினால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்தத் தகவலின் படி அண்ணாநகர் மற்றும் கீழ்ப்பாக்கத்தில் இருந்து சுமார் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த சம்பவம் குறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fire accident in shopping mall chennai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->