சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து - பணியாளர்களின் கதி என்ன? - Seithipunal
Seithipunal


பட்டாசு உற்பத்திக்கு பேர் பெற்ற ஊரான விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அவ்வப்போது வெடி விபத்து சம்பவங்களும் அரங்கேறி வருகின்றனர். இந்த நிலையில், சிவகாசி அருகே கோனம்பட்டியில் ஒரு தனியார் பட்டாசு கடை ஒன்று இயங்கி வந்தது. இந்த கடையில் இன்று காலை வழக்கம் போல் பணியாளர்கள் பட்டாசுகளை விற்பணை செய்துகொடிருந்தனர்.

அப்போது, திடீரென பட்டாசுகளை சேகரித்து வைத்திருந்த குடோனில் இருந்து புகை வெளியேறியது. இதைப்பார்த்த பணியாளர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியில் சென்றனர். பின்னர் பட்டாசுகள் அடுத்தடுத்து வெடிக்க தொடங்கின. இதனால், அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் சம்பவம் குறித்து தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் தகவல் தெரிவித்தனர். 

அதன் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பட்டாசு கடையில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த வெடி விபத்ததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

fire accident in firecrackers sales shop near sivakasi


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->