சென்னை || ஏடிஎம் மையத்தில் ஏற்பட்ட தீவிபத்து, சரியான நேரத்தில் செயல்ப்பட்ட தீயணைப்பு வீரர்கள்..! - Seithipunal
Seithipunal


ஏடிஎம் மையத்தில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை, அண்ணனூர் சிவசக்தி நகர் மெயின் ரோட்டில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது.  இன்று அதிகாலை அந்த மையத்தில் இருந்து திடீரென வெடிசத்துடன் கரும்புகை வெளிவந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் வசிப்பவர்கள். அங்கு வந்து பார்க்கும் போது ஏடிஎம் மையம் எரிந்ததுள்ளது.

உடனடியாக அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் அங்கு வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் ஏ.டி.எம். மையத்தில் உள்ள மின்சார பெட்டியில் ஏற்பட்ட உயர் மின்னழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் ஏ.டி.எம். எந்திரத்தில் தீப்பிடிக்காமல் தடுக்கப்பட்டதோடு சுமார் ரூ.4 லட்சம் ரூபாய் பணம் தப்பியது. இந்த சம்பவம் அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fire Accident in ATM Machine


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->