திண்டுக்கல்.! தனியார் காகித ஆலையில் பயங்கர தீ விபத்து.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் காகித ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சாமிநாதபுரம் தனியார் காகித ஆலை ஒன்று அமைந்துள்ளது.

இங்கு காகித உற்பத்திக்காக ஆலை வளாகத்தில் டன் கணக்கில் பழைய பேப்பர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று திடீரென பழைய பேப்பர் வைத்திருந்த பகுதியில் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது.

இதையடுத்து அங்கிருந்து தொழிலாளர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்ற நிலையில் தீயானது மளமளவென கொழுந்துவிட்டு எரிந்து பேப்பர் வைத்திருந்த அப்பகுதி முழுவதும் பரவியது.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு சுமார் ஒரு மணி நேர கடும் போராட்டத்திற்கு பின்பு தீயை அடைத்தனர்.

இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள, பல டன் பேப்பர் எரிந்து நாசமாகி உள்ளதாக ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fire accident at the paper mill in Dindigul


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->