புழல் சிறையில் இருந்து பெண் கைதி தப்பி ஓட்டம்!! - Seithipunal
Seithipunal


சென்னை புழல் சிறையில் இருந்து பெண் கைதி ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ஜெயந்தி என்ற கைதி திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதால் அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு அவர் மீது குண்டா சட்டம் பாய்ந்தது.

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஜெயந்தி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று பிற்பகல் வரை சிறையில் இருந்துள்ளார். மதியம் உணவு இடைவேளைக்கு பின் பணிகளைத் தொடர்ந்த அவர் மாலை கைதிகளை கணக்கெடுக்கும் போது காணாமல் போனது தெரிய வந்தது.

புழல் சிறை சுற்றி 10 அடி உயரத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் பெண் கைதி தப்பி ஓடியுள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பெண் கைதி எப்படி வெளியே சென்றார்? சுவரில் குதித்து தப்பினாரா? ஏதாவது வாகனம் மூலம் வெளியே சென்றாரா? உள்ளே இருந்தவர்கள் உதவியுடன் வெளியே சென்றாரா? என்ற கோணத்தில் சிறைத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Female prisoner escaped from Puzhal Jail


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->