ஆடுகளுக்கு இலை பறிக்க சென்ற விவசாயி மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


ஆடுகளுக்கு இலை பறிக்க சென்ற விவசாயி மீது மின்சாரம் பாய்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம் கயிலாயபுரத்தை சேர்ந்த சங்கரியின் மகன் ஏழுமலை. இவர் விவசாயம் பார்த்துக் கொண்டு, ஆடுகளும் வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் ஆடுகளுக்கு இலை பறிப்பதற்காக அப்பகுதியில் இருந்த மரத்தில் ஏறி உள்ளார்.

இதைத்தொடர்ந்து ஏழுமலை இலைகளைப் பறித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவ்வழியாக செல்லும் உயரழுத்த மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதை அடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அரூர் காவல்துறையினர் ஏழுமலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Farmer killed by electricity in dharmapuri


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->