மனைவி இறந்த சோகம்.. விவசாயி விபரீத முடிவு.. மதுரையில் பரிதாபம்..! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் மனைவி இறந்த துக்கத்தில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி மொக்கை(47). இவரது மனைவி கடந்த ஆண்டு முன் இறந்துவிட்டார். இதையடுத்து மகன் வீட்டில் வசித்து வந்த மொக்கை, மனைவி இறந்த துக்கத்தில் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், மொக்கை தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்துள்ளார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மொக்கையை மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த முக்கையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து விக்கிரமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Farmer commits suicide in madurai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->