விருதுநகரில் வெடி விபத்து! பட்டாசு ஆலையில் நடந்த திடீர் சோகம்..! 3 பேர் பலி
Explosion in Virudhunagar sudden tragedy occurred at a cracker factory 3 people died
விருதுநகரில் காரியாபட்டி அருகே வடகரையில் 'ராஜா சந்திரசேகர்' என்பவருக்கு சொந்தமான 'யுவராஜ் பட்டாசு' ஆலை இருக்கிறது. அதில் எதிர்பாராதவிதமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

இவ்விபத்து பட்டாசு ஆலையில் பேன்சி ரக பட்டாசு தயாரித்தபோது வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் வெடிவிபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதில் 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது.
மேலும், பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒரு கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்து குறித்து காவலர்கள் மேற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Explosion in Virudhunagar sudden tragedy occurred at a cracker factory 3 people died