விளையாட்டு மைதானத்தில் வீரத்தை நிலை நாட்டுங்கள்.. காரைக்குடி மேயர் மாணவர்களுக்கு அறிவுரை! - Seithipunal
Seithipunal


விளையாட்டு மைதானத்தில் வீரத்தையும் கலைக்கூடத்தில் கற்பனையை வளருங்கள் என்றும்,இவையனைத்தும் உங்கள் எதிர்காலத்தை செழிக்க வைக்குமென்றும் என காரைக்குடி மாநகராட்சி மேயர் சே.முத்துத்துரை மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். 

காரைக்குடி அருகே மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் வருடாந்திர பதவியேற்பு விழா பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக காரைக்குடி மாநகராட்சி மேயர் சே.முத்துத்துரை, பெற்றோர் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர். செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் தாளாளர் குமரேசன் - சாந்தி குமரேசன் ,பள்ளியின் துணைத் தாளாளர் அருண்குமார் - பிரீத்தி, பள்ளியின் முதல்வர் உஷாகுமாரி, துணைமுதல்வர் பிரேம சித்ரா, பள்ளியின் இருபால் ஆசிரியர்களும் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றனர்.

நிகழ்வின் தொடக்கமாக, பள்ளியின் புகழை எங்கும் பரவச் செய்யும் வகையில் மங்கள விளக்கேற்றியும், கண்கவர் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது. புதிய தலைமை மாணவர்கள், துணைத் தலைமை மாணவர்கள் மற்றும் பல்வேறு பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு விருந்தினர்களால் பதவிப் பிரமானம் செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் தங்களது கடமைகளை நேர்மையுடனும் தங்களது பணியை ஆற்றுவதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பள்ளியின் தாளாளர் மற்றும் துணைத் தாளாளர் தனது துறைகளில், "வண்ணமயமான கனவுகளுடன் பள்ளிக்கு வருபவர்களே! இன்று உங்களின் புதிய பயணம் தொடங்கும் தருணம். தலைவர் துணைத் தலைவர் மற்றும் பிற பொறுப்பாளர்களே, மாணவர்களின் நம்பிக்கையை உங்கள் கைகளில் ஏந்தியுள்ளீர்கள். உங்களின் கைகளில் பள்ளியை முன்நின்று வழிநடத்தும் தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. உங்கள் தோளில் சுகமான பொறுப்புகள்சுமத்தப்பட்டிருக்கிறது சமுகப் பொறுப்புடன், பள்ளியின் வளர்ச்சியை உறுதி செய்யுங்கள் உங்கள் கடமையை நேர்மையுடனும், உண்மையுடனும் செய்யுமாறும் வலியுறுத்தினர்.

விழாவின் சிறப்பு விருந்தினர் மேயர் சே.முத்துத்துரை தனது சிறப்புரையில் வகுப்பறையில் அறிவையும்,விளையாட்டு மைதானத்தில் வீரத்தையும் கலைக்கூடத்தில் கற்பனையை வளருங்கள் என்றும்,இவையனைத்தும் உங்கள் எதிர்காலத்தை செழிக்க வைக்குமென்றும், உங்கள் ஒவ்வொரு செயலும் சமுதாயத்திற்கு ஒருபாடமாக அமையட்டுமென்றும் கனவுகள் மலரட்டுமென்றும் மாணவர் மனதில் சிந்தனை விதையைத் தூவி இடம் அமர்ந்தார்.

விழாவின் நிறைவாக பள்ளியின் துணை முதல்வர் பிரேமசித்ரா  விண்வெளியில் சிறகடிக்கத் துடிக்கும் பறவைகளிடம் "உங்களின் கனவுகள் மலரட்டும்; கடமைகள் தொடரட்டும் என்று மாணவர்களை வாழ்த்தியதோடல்லாமல் விழாவிற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Establish bravery in the playground Advice from the Karaikudi Mayor to the students


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->