மரக்காணம் கள்ளச்சாராயம் விவகாரம்.. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தார் ஈபிஎஸ்..!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள் 40க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை நேற்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

இந்த நிலையில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

சிகிச்சை பெற்றுவருபவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கினார். மேலும் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் மருத்துவரிடம் கேட்டறிந்தார். அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவேண்டும் என்றும் மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டார். அப்போது அவருடன் முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் மற்றும் அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

திருச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் கலாச்சாராயம் மற்றும் கஞ்சா போன்ற போதை பொருள் அதிகரித்து விட்டதாகவும், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரத்தில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

EPS personally meet fake liquor victims


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->