தேனி மாவட்டம்! ராட்டினத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் ராட்டினத்தில் மின்சாரம் பாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தென் தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்னிலையில் திருவிழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த ராட்டினத்தில் உப்பார்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் ராட்டினத்தை பராமரிப்பு பணியை மேற்கொண்டிருந்தார்.

அப்பொழுது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் முத்துக்குமார் தூக்கி வீசப்பட்டு உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த முத்துக்குமார் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் முத்துக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Electrocuted on one person died during festival


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->