''1000 யூனிட் இலவச மின்சாரத்தை 1500 யூனிட்டாக உயர்த்த வேண்டும்''; விசைத்தறியாளர்கள் கோரிக்கை..!
Electricity experts demand that the free electricity allowance be increased from 1000 units to 1500 units
தமிழகத்தில் சுமார் 05 லட்சம் விசைத்தறிகள் மூலம் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்புக்குப் பிறகு, ஏற்றுமதி ஆர்டர்கள் குறைவு, மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் விசைத்தறித் தொழில் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருவதாக விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தவெக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, ஆயிரம் யூனிட் இலவச மின்சாரத்தை ஆயிரத்து 500 யூனிட்டாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
அத்துடன், அழிவின் விளிம்பில் உள்ள விசைத்தறித் தொழிலை பாதுகாக்கும் வகையில், தமிழக அரசு இந்த பட்ஜெட்டில் சிறப்பு நிதி ஒதுக்கி திட்டங்களை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
English Summary
Electricity experts demand that the free electricity allowance be increased from 1000 units to 1500 units