#ஈரோடு || மின்வாரிய ஒப்பந்த ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே குருப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி ஜெயப்பிரியா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளார்.

சிவக்குமார் மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் பெருந்தலையூர்-மேவானி ரோடு சுதாபிரியா தோட்டம் அருகே உள்ள மின் கம்பத்தில் பெயிண்டிங் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சிவகுமார் தூக்கி வீசப்பட்டார்.

இதையடுத்து இதனைப் பார்த்து சக ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கவுந்தம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிவகுமாரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சிவகுமாரின் மனைவி ஜெயப்பிரியா தனது கணவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Electricity contractor killed by lightning in erode


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->