தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமி காரில் சோதனை - அதிரடி காட்டும் தேர்தல் அதிகாரிகள்.!
election flying squad check kalanithi veerasami car
நாடு முழுவதும் தேர்தல் காலம் சூடுபிடித்துள்ளது. அதன் படி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு ஓட்டு போடுவதற்காக பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இதற்காக பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு உள்ளிட்டவை அதற்கான சோதனைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை பெரம்பூர் மேம்பாலம் அருகே வடசென்னை தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமி காரில் சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவரின் காரை தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சோதனையில் பணமோ, பொருளோ எதுவும் காரில் இல்லை. முழுமையான சோதனை முடிந்த பின்னர் கலாநிதி வீராசாமி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
English Summary
election flying squad check kalanithi veerasami car