சென்னையில் பேரதிர்ச்சி.. சித்த மருத்துவர் ஊசி போட்டு முதியவர் பலி.!! - Seithipunal
Seithipunal


சென்னை அருகே பூந்தமல்லியில் சித்த மருத்துவர் ஊசி போட்டதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தில் சித்த மருத்துவர் பெருமாள் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த முதியவருக்கு ஊசி போட்டு உள்ளார்.

சித்த மருத்துவர் பெருமாள் அப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக சித்த மருத்துவமனை வைத்து நடத்தி வரும் நிலையில் ராஜேந்திரன் என்பவர் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சைக்கு வந்த போது ஊசி போட்டதில் அடுத்த 10 நிமிடங்களில் முதியவர் ராஜேந்திரன் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். 

இது குறித்து அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பூந்தமல்லி போலீசார் ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

சித்த மருத்துவம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த சித்த மருத்துவர் பெருமாளை கைது செய்து பூந்தமல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Elderly man dies after injection by Siddha doctor


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->