முசிறி : சக மாணவர்கள் தாக்கி உயிரிழந்த மாணவனுக்கு நிதியுதவி வழங்கிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.!
Education minister relief fund to musiri school student death
திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி அருகே தொட்டியம் பாலசமுத்திரம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது.இந்தப் பள்ளியில் தோளூர் பட்டியைச் சேர்ந்த மவுலிஸ்வரன் என்ற மாணவன் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் 3 மாணவர்கள் சேர்ந்து தாக்கியதில் மவுலீஸ்வரன் உயிரிழந்தார்.
இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மவுலீஸ்வரனைத் தாக்கிய 3 மாணவர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் கவன குறைவாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து செய்யப்பட்டுள்ளது. மேலும், 3 ஆசிரியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் திருச்சியில் அரசு பள்ளி உயிரிழந்த மாணவனின் மவுலீஸ்வரன் குடும்பத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரூ.1 லட்சம் நிதியுதவியை அமைச்சர் வழங்கினார்.
English Summary
Education minister relief fund to musiri school student death