அரைவேக்காட்டுத் தனமான அரசியல் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொந்தளிப்பு! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார்.

அதில், "உட்கட்சி குழப்பங்கள் மற்றும் கூட்டணி சிக்கல்களை மறைக்கவே, எடப்பாடி பழனிசாமி அரசியல் அறிக்கைகளை வெளியிடுகிறார். மக்களிடம் கிடைக்கும் ஆதரவை சகிக்க முடியாமல், எப்போதும் புலம்பும் நிலைக்கே அவர் தள்ளப்பட்டுள்ளார். அவரது அறிக்கைகள் தெளிவற்றதும், அரைவேக்காட்டு போக்கிலும்  இருக்கின்றன."

மேலும், "பெட்டியில் எண்ணம் முடங்கிய நிலையிலேயே பழனிசாமி செயல்படுகிறார். அவரால் இன்று மக்களின் உண்மை தேவை புரிந்து கொள்வதே கடினம்," என்றார்.

மக்கள் மனுக்களுக்கு அரசு பக்கபலமான நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், தமிழக அரசு திறந்தன்மையுடன் செயல்படுகிறது என்றார்.

"மக்கள் குறைகளை நேரில் கேட்கும் வகையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் தொடரும். இதுவரை நடந்த முகாம்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. வருங்காலத்தில் மேலும் 10,000 முகாம்கள் நடைபெறும்," எனவும் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Edappadi Palaniswami ADMK DMK MK Stalin 


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->