இருண்ட நாட்கள்! அவசர நிலை பிரகடனம்... ஜனநாயகத்தை காங்கிரஸ் அரசு கைது செய்த காலம்...! - பிரதமர் மோடி
Dark days Emergency declared time when Congress government arrested democracy Prime Minister Modi
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டதாவது,"இந்திய வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றான அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

மக்களின் அடிப்படை உரிமை, பத்திரிகை சுதந்திரம் போன்றவை அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட நாட்களில் பறிக்கப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், சாதாரண குடிமக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவசர நிலையின்போது காங்கிரஸ் அரசு ஜனநாயகத்தை கைது செய்தது போல இருந்தது.அவசர நிலையின் இருண்ட நாட்களை நினைவில் வைத்திருப்பவர்கள் அல்லது அந்தக் காலத்தில் துன்பப்பட்ட குடும்பங்கள் தங்கள் அனுபவங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இது 1975 முதல் 1977 வரையிலான அவமானகரமான காலம் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்" என்று தெரிவித்துள்ளது.
English Summary
Dark days Emergency declared time when Congress government arrested democracy Prime Minister Modi