ஐயோ! சுங்கச்சாவடியில் வீண் தாமதத்தை தடுக்க வேறு வழி இல்லையா? மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி...?
Is there no other way to prevent unnecessary delays at toll booths Madurai High Court questions
உயர்நீதிமன்ற மதுரை கிளையில்,மாநிலங்களிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க தடை கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில் எல்லா மாநிலங்களிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளிலுள்ள சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதம், அரசியலமைப்பிற்கு எதிரானது.
உயர்நீதிமன்ற மதுரை:
இதனால் சுங்கக் கட்டணம் வசூலிக்க தடைவிதித்து உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மனு விசாரணையின்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை, "தேசிய நெஞ்சாலை அமைப்பதன் நோக்கமே தடையற்ற பயணத்திற்காகத்தான். ஆனால் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் சுங்க கட்டணம் செலுத்தி நகர்வதற்கு அரைமணி நேரமாகிறது. சுங்கச் சாவடிகளில் வீண் தாமதத்தை தடுக்க வேறு வழியில்லையா?" எனக் கேள்வி எழுப்பியது.
அத்துடன் இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை இயக்குனர் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டுள்ளது.இது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
English Summary
Is there no other way to prevent unnecessary delays at toll booths Madurai High Court questions