உபரிநீர் திறப்பு குறைபட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 88000 கனி அடியாக குறைந்தது...!
Due reduction surplus water release water flow Okenakkal has decreased to 88000 cubic feet
கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்திலுள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பிவிட்டது.இதனால் தமிழகத்திற்கு 2 அணைகளின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி தண்ணீர்காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதில் கடந்த 27-ந்தேதி தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 98000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கி, நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. ஆனால்,தற்போது கர்நாடகா அணைகளிலிருந்து உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டதால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 88000 கனஅடியாக குறைந்தது.
அதுமட்டுமின்றி,தொடர்ந்து காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல் ஐந்தருவிகள், மெயின் அருவி, சினிபால்ஸ் உள்பட அருவிகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேலே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளிலுள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
இதன் காரணமாக ஒகேனக்கல், ராணிப்பேட்டை, சத்திரம், ஊட்டமலை, நாடார் கொட்டாய் மற்றும் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, இன்று 4-வது நாளாக ஒகேனக்கல்லிலுள்ள ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
English Summary
Due reduction surplus water release water flow Okenakkal has decreased to 88000 cubic feet