ஓட்டுநர் கொடூர கொலை: மனைவி காவல் நிலையத்தில் சரண்! நடந்தது என்ன?
driver murder wife surrendered police station
மது போதையில் தகராறு செய்த கணவரை அடித்து கொலை செய்த மனைவி காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல், நத்தம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 40). இவர் ஓட்டுனராக பணியாற்றினார். இவரது மனைவி பாண்டீஸ்வரி (வயது 33). இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.
மதுபழக்கத்திற்கு அடிமையான ராஜேந்திரன் எப்பொழுதும் மதுபோதையில் இருந்து வந்ததால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலை ராஜேந்திரன் தனது மனைவியை கடப்பாரையை கொண்டு தாக்க முயன்ற போது பாண்டீஸ்வரி தன்னை காத்துக் கொள்வதற்காக கடப்பாரையை பிடுங்கி கணவரை தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை தொடர்ந்து கணவனை கொலை செய்த பாண்டீஸ்வரி நத்தம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
பின்னர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
driver murder wife surrendered police station