வரதட்சணை கொடுமை: மனைவியை எரித்த கணவர்! - Seithipunal
Seithipunal


திருமணம் முடிந்த பின்பும்  மேலும் ரூ.5 லட்சம் ரொக்கத்தை வரதட்சணையாக கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தி தீ வைத்து எரித்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகா ஹொசூரு கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமந்த் என்பவருக்கும் , சுஷ்மா என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்த ஸ்ரீமந்த் மனைவி சுஷ்மாயுடன் கணவர் வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார்.

அப்போது  சுஷ்மா தனது  திருமணத்தின்போது ஸ்ரீமந்த் கேட்ட வரதட்சணையை சுஷ்மாவின் பெற்றோர் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுஷ்மாவிடம் மேலும் ரூ.5 லட்சம் ரொக்கத்தை வரதட்சணையாக கேட்டு ஸ்ரீமந்த் கொடுமைப்படுத்தி வந்ததாகவும் . அதற்கு அவருடைய குடும்பத்தாரும் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் அடிக்கடி சுஷ்மாவுக்கும், அவரது கணவர் ஸ்ரீமந்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று யாரும் இல்லாத நேரத்தில் சுஷ்மா மீது மண்எண்ணெய் ஊற்றி தீவைத்த ஸ்ரீமந்த் அவரை கொலை செய்ய முயன்றுள்ளார் .அப்போது  தீயில் கருகிய சுஷ்மாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஹாசன் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் குறித்து சக்லேஷ்புரா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீமந்திடம் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dowry torture Husband burns wife


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->