#Breaking: திமுகவில் ஜாதிக்கொரு நீதி... வி.பி.துரைசாமி பரபரப்பு பேட்டி..!! - Seithipunal
Seithipunal


திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைப்பொதுச்செயலாளராக பதவிவகித்து வந்த வி.பி.துரைசாமி, பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் முருகனை கடந்த சில நாட்களுக்கு முன்னிலையில் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பின்னர் பல சர்ச்சைகள் எழுந்தது. இதனையடுத்து திமுக தலைமை வி.பி.துரைசாமியை பதவியில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார். 

இந்த நிலையில், சென்னையில் உள்ள தியாகராஜா நகர் பாரதிய ஜனதா கட்சியின் கமலாலயத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த வி.பி.துரைசாமி, பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள். பாரதிய ஜனதா கட்சியின் கமலாலயத்தில் பாஜக தமிழக தலைவர் முருகனின் முன்னிலையில் நான் பாஜகவில் இணைகிறேன். திமுகவில் நான் அடிப்படை உறுப்பினர் பதிவில் இருந்து நானே விலகியுள்ளேன். அதுதான் எனக்கு மரியாதை. 

திமுகவின் நடவடிக்கைக்கு எதிர்த்து, அவர்களுடன் நான் கேள்வி எழுப்ப விருப்பவில்லை.. மு.க.ஸ்டாலின் அவரது தந்தை இருக்கும் சமயத்திலேயே தனக்கானதை உருவாக்கிக்கொண்டார். எனது பாதை இனி வேறு.. நல்ல வழியில், நல்ல நிலைமைக்கு நான் செல்லவிருக்கிறேன். திமுகவில் ஜாதிக்கு ஒரு நீதி இருக்கிறது. திமுகவில் இருந்து விலகிக்கொள்ள தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்று கூறியுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK politics and Justice depending upon caste vise VP Duraisamy says


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->