#Breaking: கொரோனாவின் பிடியில் அடுத்த திமுக எம்.எல்.ஏ.. அதிர்ச்சியில் ஸ்டாலின்.!!
DMK Nagarcoil MLA corona test positive
தமிழகத்தில் கரோனாவால் ஏற்பட்ட மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,20,716 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 1,62,249 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 3,571 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களுக்கு அரசு பல உதவி செய்தது. தன்னார்வலர்களும், பிற அரசு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் மக்களுக்கு களப்பணியில் ஈடுபட்டு உதவி செய்து வந்த நிலையில், களப்பணியாற்றிய நபர்களுக்கும் கொரோனா உறுதியானது. பல அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தற்போது மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நாகர்கோவில் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருபவர் சுரேஷ் ராஜன். இவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். மேலும், தற்போது வரை மொத்தமாக 20 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
DMK Nagarcoil MLA corona test positive