திமுக ஆட்சியை பக்தர்கள் பாராட்டுகிறார்கள்! அற்பர்கள் கதறுகிறார்கள் - CM ஸ்டாலின் பகிர்ந்த வீடியோ!
DMK Govt MK Stalin
நாகை அருகேயுள்ள திருப்புகலூரில், வேளக்குறிச்சி ஆதீனத்திற்கு உட்பட்ட கருந்தாழ்குழலி அம்பாள்–அக்னீஸ்வரசாமி கோவிலில் இன்று காலை கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.
விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்களும் பங்கேற்று ஆனந்தமுடன் வழிபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “அறநிலையத்துறை மூலம் இதுவரை 3,000 கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது,” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“திராவிட மாடல் ஆட்சி தொடங்கி 1,491 நாட்களில் 3,000 கோவில்களில் குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றுள்ளன.
எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கத்தில் செயல்படும் இந்த ஆட்சியை பக்தர்கள் பாராட்டுகிறார்கள், அற்பர்கள் கதறுகிறார்கள. அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும் அதிகாரிகளுக்கும் வாழ்த்துகள்,” என பதிவு செய்துள்ளார்.