சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக நிர்வாகி! சிறையில் அடைக்கப்பட்டதால் பரபரப்பு!
dmk administrator arrested by kundos for child sexual abuse
நீலகிரி மாவட்டத்தில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் திமுக நிர்வாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், நெல்லியாளம் அரசு தேயிலை தோட்ட பகுதியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி திராவிடமணி என்பவர் (வயது 54) கடந்த மாதம், அதே பகுதியில் ஒரு சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுவனின் பெற்றோர்கள் புகார் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து போலிஸ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக, திராவிடமணியிடம் விசாரணை நடத்தினார்கள். மேலும் சிறுவனிடமும் தனியாக விசாரணை நடத்தினார்கள். அப்போது சிறுவன் தரப்பில் பல்வேறு புகார்கள் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட திராவிடமணியை போலீசார் கைது செய்து பந்தலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அதன் பின்னர் கூடலூர் கிளை சிறையில் திராவிடமணி அடைக்கப்பட்டார். இந்நிலையில் திராவிடமணியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அனுமதிக்கும்படி, பரிந்துரை செய்யப்பட்டது.
இது குறித்து மாவட்ட உயரதிகாரிகள் விசாரணை நடத்திய பின்னர் திராவிடமணியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து 1 ஆண்டு சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார்.
குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய அளிக்கப்பட்ட உத்தரவு சேரம்பாடி காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து கூடலூர் கிளை சிறையில் இருந்த திராவிடமணியை கோவை மத்திய சிறைக்கு அழைத்து சென்று அடைத்தனர்.
சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தி.மு.க. நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது செய்து அடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
dmk administrator arrested by kundos for child sexual abuse