திண்டுக்கல்லில் சிறுமி கர்ப்பம்! விரக்தியில் தாய், தந்தை தற்கொலை! அதிர்ச்சி பின்னணி! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல்லில் 13 வயது சிறுமி கர்ப்பமானதால், சிறுமியின் தாய் மற்றும் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்துக்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த தம்பதியின் 13 வயது மகள், சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பெற்றோர் மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் இந்த விவகாரம் குறித்து சீரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும், சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒரு வாலிபரிடம் டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதன் முடிவுகள் இதுவரை வெளியாகாததால், போலீசார் எந்தவிதமான கைது நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில், சிறுமியின் தாய் மற்றும் தந்தை விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான செய்தி சமூக வலைதளங்களில் வெளியானதுடன், இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும் என்றும், சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இளைஞரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dindigul minor girl harassment case


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->