மின்சாரம் தாக்கி உயிரிழந்த 10 ஆம் வகுப்பு மாணவன் - முடிவை பார்த்து கதறி அழுத பெற்றோர்.!!
died 10th class student pass public exam in mayiladuthurai
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள செம்பனார்கோவில் அருகே மேலையூர் வடக்கு தெருவை சேர்ந்த தங்கதுரை மகன் தமிழ்துரை. 10-ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்த இவர் கடந்த மாதம் 25-ம் தேதி உத்திராபதியார் கோவில் திருவிழாவிற்காக கட்டப்பட்டிருந்த லைட் போஸ்ட் அருகில் விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரது கை லைட் போஸ்டில் பட்டதில் தமிழ்துரை மீது மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டு மயக்க நிலையில் கிடந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் தமிழ்த்துரையை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் தமிழ்துரை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியான நிலையில், மாணவன் தமிழ்துரை, 313 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார். மகனின் தேர்வு முடிவை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.
English Summary
died 10th class student pass public exam in mayiladuthurai