தமிழகத்தில் 40 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் – டிஜிபி உத்தரவு!
DGP Transfer TN Govt Tamilnadu
தமிழக காவல் துறையில் உயர்மட்டத்தில் அதிகாரிகளுக்கு இடமாற்றம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மொத்தம் 40 காவல் துணைக் கண்காணிப்பாளர்களை (DSP) பணியிட மாற்றம் செய்து, மாநில காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, சென்னை எம்கேபி நகர் சரகத்தில் உதவி ஆணையராக பணியாற்றி வந்த மணிவண்ணன், மன்னார்குடி காவல் துணைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், சென்னை மத்திய குற்றப்பிரிவில் உதவி ஆணையராக உள்ள காவ்யா, மணப்பாறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும், கோவை சிபிசிஐடியில் பணியாற்றும் டிஎஸ்பி சரவணன், சேலம் காவல் உதவி ஆணையராக உள்ள செல்வம், தீவிரவாத தடுப்பு பிரிவு டிஎஸ்பி பண்டாரசாமி மற்றும் சென்னை திருமங்கலம் உதவி ஆணையராக உள்ள பிரம்மானந்தனும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளவர்கள் பட்டியலில் இடம்பProvidence.
அதிகாரிகள் இடமாற்றம் குறித்து காவல் துறையினர் அனைத்து பகுதிகளுக்கும் அறிவிப்புகளை அனுப்பியுள்ளனர்.
English Summary
DGP Transfer TN Govt Tamilnadu