கிரிவலம் சென்ற போது சோகம் - மயங்கி விழுந்து பக்தர் பலி.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர். இந்த நிலையில், நேற்று காலை 6 மணியளவில் கிரிவலம் வந்த பக்தர் ஒருவர் கிரிவலப்பாதை முடியும் இடமான வேலூர் சாலை தமிழ்நாடு ஓட்டல் அருகில் சாலையோரம் உள்ள இடத்தில் அமர்ந்தார். 

பின்னர் தான் வைத்திருந்த தண்ணீரை அருந்திய சில நிமிடங்களில் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசார் ஆம்புலன்சுடன் விரைந்து வந்தனர். அம்புலன்ஸ் ஊழியர்கள் அந்த நபரை சோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதையடுத்து போலீசார் உயிரிழந்த ஊழியரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த நபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

devotee died in thiruvannamalai girivalam


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->