டெங்கு பாதிப்பு நடவடிக்கை: தமிழக அரசு புதிய உத்தரவு!
Dengue outbreak measures Tamil Nadu government issues new order
தமிழகத்தில் டெங்கு பாதிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் டெங்கு நோய் மழை காலமான அக்டோபர், நவம்பர் மாதங்களில் அதிகம் காணப்படுகிறது. மழை பெய்த பிறகு வீடுகளிலும் மற்றும் சுற்றுப்புறங்களிலும் நீர் தேங்கி நிற்கும் நீரில், டெங்கு நோயை உருவாக்கும் ஏடிஸ் ஈஜிப்டி கொசுக்கள் அதிகம் பெருகுகின்றன. குறிப்பாக கருப்பு நிறம், வெள்ளை கோடுகள் கொண்ட கொசு டெங்கு நோயை பரப்புகிறது.
டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் திடீரென உயர் காய்ச்சல், கடுமையான தலைவலி, கண்களின் பின்புறம் வலி, மூட்டு, தசை வலி,சோர்வு போன்ற அறிகுறிகள் இருக்கும். உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.
டெங்கு நோய் வந்த பின் சிறப்பு மருந்து எதுவும் இல்லை. எனவே தடுப்பதே சிறந்த வழியாகும். எனவே கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க வேண்டும். எனவே வீட்டில், தண்ணீர் தேங்க விடக்கூடாது. வாரம் ஒருமுறை இவை அனைத்தையும் காலி செய்து சுத்தம் செய்ய வேண்டும்.
ஒருவருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் உடனே டாக்டரை அணுக வேண்டும். நிறைய தண்ணீர், ஜூஸ், கனிகள் சாப்பிட வேண்டும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.
எனவே தமிழக அரசு, வந்த பிறகு நடவடிக்கை என்பதற்கு பதிலாக டெங்கு வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தும்படி அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
Dengue outbreak measures Tamil Nadu government issues new order