போதிய நீர் இல்​லை; ஜூன் 12-இல் திறக்கப்படாத மேட்டூர் அணை: டெல்டா விவ​சா​யிகள் கவலை​..! - Seithipunal
Seithipunal


போதிய நீர் இல்​லாத காரணத்​தால் 62-வது முறை​யாக இந்த ஆண்டு குறித்த தேதி​யில் டெல்டா பாசனத்​துக்​காக வழக்​க​மாக ஜூன் 12-ஆம் தேதி திறக்​கப்​படும் மேட்​டூர் அணை, திறக்​கப்​பட​வில்​லை. அணை திறப்பு தாமத​மாவது குறித்​தோ, குறுவை சிறப்பு தொகுப்பு திட்​டம் குறித்தோ அரசிட​மிருந்து எந்த அறி​விப்​பும் வராத​தால் டெல்டா விவ​சா​யிகள் கவலை​அடைந்​துள்​ளனர்.

டெல்டா மாவட்​டங்​களில் விவ​சா​யிகள் குறு​வை, சம்​பா, தாளடி பரு​வங்​களில் நெல் சாகுபடி மேற்​கொள்​வதற்கு 120 அடி கொள்​ளளவு கொண்ட மேட்​டூர் அணை​யில் இருந்து ஆண்​டு​தோறும் ஜூன் 12-ஆம் தேதி நீர் திறக்​கப்​படு​வது வழக்​கம்.

 அதே ​நேரம், அணை​யில் நீர் இருப்​பைப் பொறுத்து ஜூன் 12-ஆம் தேதிக்கு முன்​பாகவோ அல்​லது கால​தாமதமாக  அணை​யில் இருந்து நீர் திறந்து விடப்​படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அணை​யில் குறைந்​த​பட்​சம் 90 அடி நீர் இருந்​தால் மட்​டுமே டெல்டா சாகுபடிக்கு முழு​மை​யாக திறக்க முடி​யும். ஆனால்,  நடப்பு பாசன ஆண்​டுக்கு இன்​று (ஜூன் 12) நீர் திறக்​கப்பட வேண்​டிய நிலை​யில் அணை​யின் நீர்​மட்​டம் 79.62 அடி​யாக உள்​ளது. எனவே, இன்று நீர் திறக்க முடி​யாத நிலை ஏற்பட்டுள்​ளது.

அணை​யின் 93 ஆண்டு கால வரலாற்​றில் உரிய காலத்​தில்​(ஜூன் 12) டெல்டா பாசனத்​துக்கு நீர் திறக்​கப்​ப​டா​மல்​போவது இது 62-வது முறை​யாகும். அத்துடன், உரிய நாளான ஜூன் 12-ஆம் தேதி 20 முறை​யும், நீர் இருப்பு திருப்​தி​கர​மாக இருந்​த​தால் ஜூன் 12-ஆம் தேதிக்கு முன்பு 11 முறை​யும் டெல்டா பாசனத்​துக்கு தண்​ணீர் திறக்​கப்​பட்​டுள்​ளது.

மேலும், இந்​தாண்டு குறிப்​பிட்ட நாளில் அணை திறக்​காத​தால், டெல்டா மாவட்​டங்​களில் சுமார் 06 லட்​சம் ஏக்​கரில் செய்ய வேண்​டிய குறுவை சாகுபடி​யின் பரப்​பளவு 50 சதவீதம் குறைந்​துள்​ளது. 

இதனால், பம்​புசெட்பாசன வசதி கொண்ட விவ​சா​யிகள் மட்​டுமே குறுவை சாகுபடி பணி​களை மேற்​கொண்​டுள்​ளனர். அதன்​படி, டெல்டா மாவட்​டங்​களில் தற்​போது சுமார் 03 லட்​சம் ஏக்​கரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டு, இது​வரை 1.75 லட்​சம் ஏக்​கரில் நெல் சாகுபடி செய்​யப்​பட்​டுள்​ளது.

ஆனால், தற்​போது மின் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டு, நெற்​ப​யிர்​கள் காய்ந்து வரு​கிறது. இதனால், ஆங்​காங்கே விவ​சா​யிகள் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். இந்நிலையில், விவ​சா​யிகளுக்கு 20 மணி நேரம் மும்​முனை மின்​சா​ரம் வழங்​கு​வதுடன், குறுவை சிறப்பு தொகுப்பு திட்​டத்தை அறிவிக்க வேண்​டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

காவிரி விவசாயிகள்: 

இதுகுறித்து காவிரி உரிமை செயற்​பாட்​டாளர் வெ.ஜீவக்​கு​மார் கூறியதாவது;

மேட்​டூர் அணை​யின் நீர் இருப்பு என்​பது இந்​தாண்டு தொடக்​கத்​திலிருந்தே குறை​வாகத் தான் உள்​ளது என்றும், ஆனால், நமக்கு உரிய தண்​ணீரை கர்​நாடக அரசிட​மிருந்து பெற தமிழக அரசு எந்த முயற்​சி​யும் எடுக்​க​வில்​லை என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், மேட்​டூர் அணை ஜூன் 12-ஆம் தேதி திறந்​தா​லும் அல்​லது கால​தாமதம் ஆனாலும், வேளாண் துறை சார்​பில் அறி​விப்பு வெளி​யிடப்​படும் என்று தெரிவித்துள்ளார். அதற்கு ஏற்ப, குறுவை சாகுபடிக்கு எந்​தெந்த ரக விதைகளை தேர்வு செய்து பயி​ரிட வேண்​டும் என ஆலோ​சனை​களும் வழங்​கப்​படும் என்று கூறியுள்ளார்.

ஆனால், இந்த ஆண்டு குறுவை சாகுபடி தொடர்​பாக வேளாண் துறை எந்த அறி​வுரை​யும் வழங்​க​வில்​லை என்றும், அரசின் இந்த மௌனம் என்​பது டெல்டா விவ​சா​யிகள் மத்​தி​யில் அதிருப்​தியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

அத்​துடன், இது​போன்ற தருணங்​களில் தமிழக அரசு குறுவை தொகுப்பு திட்​டம் அறிவிக்​கும். ஆனால், இது​வரை அதற்​கான எந்த முயற்​சி​யும் அரசு எடுக்​காதது கவலை அளிக்​கிறது என்று தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து நீர்​வளத்​துறை அதி​காரி​கள் தெரி​வித்​ததாவது: காவிரி நீர் பிடிப்பு பகு​தி​களில் போதிய அளவு மழை பெய்​தால் தான் அணைக்கு நீர் வரும் என்றும், தற்​போது நீர் வரத்து 1,000 கன அடிக்கு குறை​வாக உள்​ள​தால், இதே நிலை நீடித்​தால் ஆகஸ்ட் மாதத்​தில் தான் அணை நிரம்​பும் என எதிர்​பார்க்​கப்​படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Delta farmers are concerned as the Mettur Dam did not open on June 12


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->