நடுவழியில் நின்ற தன்பாத் ரெயில் - தண்ணீர் கூட இல்லாமல் பயணிகள் அவதி.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழாவிலிருந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் வரை செல்லக்கூடிய தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாலை சென்னை வாணியம்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்தது. 

அப்போது ரெயிலின் ஆறாவது பெட்டியில் இருந்த பிரேக் இணைப்பு துண்டானதால் ரெயில் அங்கிருந்து நகர முடியாமல் பிளாட்பாரத்திலேயே நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக அந்த பிளாட்பாரம் வழியாக செல்ல இருந்த அனைத்து ரெயில்களும் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பப்பட்டது. 

இதையடுத்து ரெயில் ஓட்டுநர் இந்த சம்பவம் தொடர்பாக ஜோலார்பேட்டையில் உள்ள ரெயில்வே உயரதிகாரிகளுக்கும், காட்பாடியில் உள்ள அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி, அதிகாரிகள் சீரமைப்புக் குழுவுடன் விரைந்து வந்து பிரேக்கை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். 

இதைத்தொடர்ந்து இந்த சீரமைப்பு பணி இரவு சுமார் 8 மணியளவில் முடிவடைந்த பின்னர் தன்பாத் ரெயில் புறப்பட்டுச் சென்றது. இதனால், அந்த ரெயிலில் பயணம் செய்த ஆயிரக்கணக்கான பயணிகள் குறித்த நேரத்திற்கு செல்லமுடியாமல் அவதிப்பட்டனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

danbad train stop mid way vaniyambadi station for brake cut in train


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->