இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து.. பால் வியாபாரி உயிரிழப்பு.!
Dairy trader killed in lorry collision with two wheeler
புளியங்குடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் பால் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
புளியங்குடி அருகே உள்ள புன்னையாபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பிச்சாண்டி மகன் முத்துக்காளை. இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் புளியங்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சோலையப்பன் பண்ணை கிராமத்தை சேர்ந்த ரவி என்பவர் லாரியில் புளியங்குடி நோக்கி வந்துள்ளார். அப்போது சொக்கம்பட்டி அருகே சென்ற போது இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பால் வியாபாரி முத்துக்காளை பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சொக்கம்பட்டி போலீசார் முத்துக்காளை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Dairy trader killed in lorry collision with two wheeler