5 மாநிலங்களை அச்சுறுத்தும் 'டிட்வா' புயல்: வட தமிழகம், புதுச்சேரியில் கனமழை – கரையைக் கடப்பதில் குழப்பம்?!
Cyclone Titva tamilnadu andra
வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே உருவாகியுள்ள 'டிட்வா' புயல் காரணமாகத் தமிழகம், புதுச்சேரி மட்டுமல்லாமல், தெலங்கானா, கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களிலும் மழைப் பொழிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் நிலவரம்
நகர்வு: டிட்வா புயல் தற்போது மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, புதுச்சேரியிலிருந்து 430 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு 530 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
அதி கனமழை எச்சரிக்கை: நவம்பர் 30 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக இன்று (நவ. 28) மற்றும் நாளை (நவ. 29) தென் தமிழகத்தின் சில பகுதிகளில் மிக கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.
பிற மாநிலங்களில் மழை
கேரளம்: நவம்பர் 30 அன்று மிக கனமழையும், நவம்பர் 29 வரை கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஆந்திரா: டிசம்பர் 2 ஆம் தேதி வரை கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தெலங்கானா: நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 வரை கனமழை பெய்யலாம்.
கர்நாடகம்: நவம்பர் 29 அன்று தெற்கு உள் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
கரையைக் கடக்கும் நிலை : புயல் எங்கு கரையைக் கடக்கும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
கணிப்பு: நவம்பர் 30 அதிகாலை வட தமிழகம் - புதுச்சேரி - தெற்கு ஆந்திரக் கடற்கரையை ஒட்டி புயல் நிலவும்.
மாற்றம்: டெல்டா பகுதியை நெருங்கி, புதுச்சேரி கடற்கரையை ஒட்டிச் சென்ற பின்னர், புயல் கரையைக் கடக்காமல் வடகிழக்கு திசையில் கடலை நோக்கித் திரும்பும் என்று தற்போதைய நிலவரப்படி எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை, வட தமிழகம் - தெற்கு ஆந்திரா அருகே கரையைக் கடக்கலாம் அல்லது கடல் பகுதியிலேயே வலுவிழக்கலாம் என்பதால், வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
English Summary
Cyclone Titva tamilnadu andra