வங்கக் கடலில் உருவாகிறது ‘சென்யார்’ புயல்: நவம்பர் 26-ஆம் தேதி புயலாக வலுப்பெற வாய்ப்பு! - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் நவம்பர் 26-ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதற்கு ‘சென்யார்’ (Senyar) என்று பெயரிடப்பட இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 'சென்யார்' என்ற பெயரை ஐக்கிய அரபு அமீரகம் வழங்கியுள்ளது. இதற்கு ‘சிங்கம்’ என்று பொருள்.

தற்போதைய நிலவரம்

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இது ஓரிரு நாட்களில் புயலாக உருமாற வாய்ப்புள்ளது.

காற்றின் வேகம்: புயல் சின்னம் வலுவடையும்போது, காற்றின் வேகம் அதிகரிக்கும். இருப்பினும், நவம்பர் 22 முதல் 27-ஆம் தேதி வரை அந்தமான் - நிகோபார் தீவுப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40 - 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

புயலின் பாதை – கணிக்க முடியாத நிலை

இந்த புயல் சின்னம் தற்போது கணிக்க முடியாத வகையில் இருப்பதாகவும், இதன் சரியான பாதை குறித்து வரும் வாரத்தில்தான் உறுதியாகத் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.

இந்த புயல் சின்னம் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் வழியாகக் கரையைக் கடக்கலாம் அல்லது மேற்கு வங்கம் - வங்கதேசம் வழியாகக் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது.

இது தாழ்வு மண்டலமாக ஒருங்கிணைக்கப்பட்ட பின்னரே, எந்தப் பகுதியில் மழை பெய்யும், எங்கு கரையைக் கடக்கும் என்பது குறித்துத் துல்லியமாகக் கணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cyclone Senyar Bay of Bengal


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->