கடலூர் பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு! காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு வர வேண்டாம்!
Cuddalore Fever school reopen
கோடை விடுமுறை முடிந்து தமிழகத்திலுள்ள பள்ளிகள் இன்று (ஜூன் 2) திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், "காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு வர வேண்டாம்" என கடலூர் முதன்மை கல்வி அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
ஒரு மாதத்துக்கும் மேலான இடைவேளைக்கு பிறகு பள்ளிகள் திறந்ததில், மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு திரும்பினர். பெற்றோரும் உற்சாகமாக தங்கள் பிள்ளைகளை அனுப்பினர்.
பள்ளிகள் திறப்பை முன்னிட்டு வளாகம் சுத்தம் செய்தல், தொற்று தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், காய்ச்சல் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது நோய் பரவ வாய்ப்பு இருப்பதால், முன்னெச்சரிக்கையாக அனுமதிக்க வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 2,432 பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட நலத்திட்ட பொருட்கள் வழங்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதிய பேருந்து பயண அட்டைகள் வரைக்கும் பழைய பயண அட்டையுடன் மாணவர்கள் பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
2025–26 கல்வியாண்டுக்கான நாள் கணிப்பு மற்றும் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது.
English Summary
Cuddalore Fever school reopen