ஜாமீனில் வெளிவந்த போலி டாக்டர்.. மீண்டும் கருக்கலைப்பு.. பெண்ணுக்கு உதிரப்போக்கு.!
Cuddalore Fake doctor arrest again
கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் அருகே ஆவட்டி பகுதியில் வசித்து வருபவர்தான் சுரேஷ்குமார். இவர் அதே பகுதியில் ஒரு மருந்தகம் நடத்தி வந்துள்ளார். இவர் மருத்துவராகவும் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது இவர் ஒரு போலி மருத்துவர் என்று பல்வேறு தகவல்கள் பரவிய நிலையில், இது பற்றி திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இந்த தகவலின் பேரில் சுரேஷ்குமார் சொந்தமான இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர் போலி மருத்துவராக இருந்தது கடந்த நவம்பர் மாதத்தில் தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட அவர் டிசம்பர் 15ஆம் தேதி ஜாமினில் வெளிவந்தார். அப்போதும் அடங்காமல் கஸ்தூரி எனும் பெண்ணுக்கு அவர் கருக்கலைப்பு செய்துள்ளார்.

இதன் காரணமாக அந்த பெண்ணுக்கு அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளார். அவர் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சுரேஷ்குமார் கொடுத்த மருந்தை சாப்பிட்டு தான் இவ்வாறு ஏற்பட்டது என்று கூறியுள்ளார்.
ஜாமினில் வெளிவந்திருக்கும் சுரேஷ் அன்றாடம் ராமநத்தம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து கையெழுத்திட வேண்டும். அப்படி சுரேஷ்குமார் கையெழுத்து போட வந்த போது கைது செய்யப்பட்டார். மீண்டும் அவருக்கு சொந்தமான இடங்களில் ஆய்வு செய்து அவரது மருந்தகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
English Summary
Cuddalore Fake doctor arrest again