அதிகம் குவிந்த சுற்றலா பயணிகள்! பழைய குற்றாலம் அருவியில் மட்டும் குளிக்க அனுமதி! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையால் நீர்வரத்து பெருகியதால், குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி விடுமுறையை முன்னிட்டு வந்துள்ள ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்த தடை காரணமாக ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. மெயின் அருவியில் நீரின் அளவு பாதுகாப்பு ஆர்ச்சை தாண்டி விழும் நிலையில், போலிசார் கயிறுகள் கட்டி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பழைய குற்றால அருவியில் நீர்வரத்து குறைந்ததை தொடர்ந்து இன்று காலை முதல் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தீபாவளி விடுமுறையை ஒட்டி குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் பழைய குற்றாலம் அருவியை நோக்கி குவிந்து வருகின்றனர். 

மழை பொழிவு குறைந்து நீர்வரத்து சீராகிய பின், பிற அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Crowded tourists Allowed to bathe only in Old Courtalam Falls


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->