#Video: கொரோனா வார்டா?.. மாமியார் வீடா... பரவசத்தில் புல்லரித்து பேச்சு.. வீட்டில் கரண்டியடி கன்பாம்..!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் மாவட்ட வாரியான பாதிப்புகள், கடந்த சில வாரமாக கடுமையான அளவு உச்சம் பெற்றுள்ளது. 

தமிழகத்தின் கொரோனா பாதிப்பை பொறுத்த வரையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,20,663 ஆக உயர்ந்துள்ளது. 1,62,691 பேர் பூரண நலனுடன் இல்லத்திற்கு திரும்பியுள்ளனர். கொரோனா ஊரடங்கு ஆறாவது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், ஏழாவது முறையாக நீட்டிப்பு ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் கொரோனா நோயாளிகளின் அட்ராசிட்டி வீடியோ வெளியாகியுள்ளது. மேலும், இந்த வீடியோ காட்சியில் மாமியாரின் வீட்டிற்கு விருந்திற்கு சென்றார் போல, கொரோனா நோயாளிகள் மிகவும் பெருமிதம் கொண்டுள்ளனர்.

இது தொடர்பான வீடியோவில் பேசிய நபர், கொரோனா நோயெல்லாம் பெரிய நோய் கிடையாது. எளிதில் அதனை வென்றுவிடலாம். இங்கு வந்த ஒரு நபர் முதலில் கொரோனாவால் பயத்தில் இருந்தார். அவரிடம் ஆறுதல் கூறி, பேசி சமாளித்து இருந்தோம். இப்போது நான் வீட்டிற்கு செல்ல மாட்டேன் என்று கூறினார்.

ஆனால் அவருக்கு கொரோனா இல்லை என்று மருத்துவ பரிசோதனையில் வந்ததால், வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். உண்மையில் மனைவி கூட வீட்டில் இவ்வாறு கவனிக்க மாட்டார். அருமையாக அனைவரையும் அரவணைத்து பார்த்துக்கொள்கின்றனர் என்று கூறுகிறார். இது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Corona virus social media troll video trending


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->