ஒரு டிராக்டர் பவளப்பாறைகள் ரூ.7000! ராமேஸ்வரத்தில் கொடிகட்டி பறக்கும் பவளப்பாறை கடத்தல்!
coral smuggling in Rameswaram
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பகுதியில் உள்ள கடை பகுதி மற்றும் தீவுகளை சுற்றிலும் கடற்கரை பகுதியில் வளரும் பவளப்பாறைகள் அதிகளவில் காணப்படுகிறது. இந்த பவளப்பாறைகளை சேதப்படுத்தவும் உடைக்கவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் ராமேஸ்வரம் இறங்காடு, வடகாடு, அரியாங்குண்டு பகுதிகளில் புதைந்து கிடக்கும் சுண்ணாம்பு பவளப்பாறைகளை சிலர் உடைத்து டிராக்டரில் கடத்தி செல்வதாக புகார் எழுந்துள்ளது.

புதிதாக வீடு கட்டுவோர் அடித்தளத்திற்கு இந்த பாறைகளை பயன்படுத்துவதால் அதிகப்படியான தேவை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு டிராக்டர் பவள சுண்ணாம்பு பாறை கற்கள் ரூ.7000 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனை ராமநாதபுரம் மாவட்ட வனத்துறையினரும் கண்டு கொள்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிகப்படியான சுண்ணாம்பு பவளப்பாறைகள் கடத்தப்படுவதால் எதிர்காலத்தில் புயல், சுனாமி எழும்பொழுது கடற்கரை பகுதி அரிப்பு ஏற்பட்டு அழியும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பட்டப்பகலில் பாறைகளை உடைத்து டிராக்டர் கடத்துவோர் யார் என்பது அதிகாரிகளுக்கு தெரியாமல் இருப்பது வேதனைக்குரியது. இது குறித்து முதல்வர் ஸ்டாலின் நீர்மட்டம் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
English Summary
coral smuggling in Rameswaram